Thursday, December 8, 2011

                                                                          நாம் சேர்ந்து


எல்லோருக்கும் தனிமை என்பது    நண்பரை அறிவதற்கு முன்பே.
ஆனால் தோழி .... எனக்கோ    உன்னை பார்த்த பின்பே.

இரும்பாய் இருந்த என் மனமும் இனிப்பாய் மாறியதோ
  காந்தமென என்னருகே கண்ணே நீ வருகையிலே?

நீ என் மனதில் குடியேறிய பின்பு மனம் கனத்து போனது.
   ஆனாலும் ஏன் பறப்பது போன்ற உணர்வு?

நீ என்னை பார்க்கும் போதெல்லாம் என் இதயம் வேகமாய் துடிக்கிறது.
   பார்த்து........ உனக்கு வலிக்கப் போகிறது.

உன் இனிய குரலை தான் மட்டுமே கேட்டு ரசிக்க முடியுமென கர்வப்பட்டன என் செவிகள் ,
   உன் மௌனத்தையும் அறியும் கண்களை பற்றி அறியும் வரை.


உன் உருவை தான் மட்டுமே கண்டு இன்புற முடியுமென இறுமாந்திருந்தன என் கண்கள்,
   உன் நினைவிலேயே இன்புறும் மனதை பற்றி அறியும் வரை.


அன்பே !  உன்னை என் பெண் சாதியாய் தான் நினைத்திருந்தேன்.
     உன் சாதி குறுக்கே வரும் வரை.

கல்லானாலும் நீயே என் கணவன் என்றாய்.  அந்தோ !
   நீயில்லை என்ற பின் தானே மனம் கல்லானது.

நான் நிம்மதியை தேடி போகிறேன்.  எங்கே ,
     நாம் "சேர்ந்து"     தேடுவோமா?



This was written during my college days..... :)




No comments:

Post a Comment