Thursday, December 30, 2021

 புதுக்கவிதை தொகுப்பு 

 ( நானும் புதுக்கவிதை எழுதினால் என்னவென்று முயற்சி செய்தபோது!)


1             அறிவை எனக்கருள் 

  உன்னை வணங்கினால் அருள்வாய் 

     என்றறிவேன் ஆண்டவனே - ஆனால்

     உன்னை வணங்கும் அறிவை எனக்கருள்!

                                                   ------

2.                                   மேகம்              16-07-1983

நீல வானத்தின் நிர்வானத்தை - நின்

கருப்பு ஆடையால் மூட முடியாமல் நீ

வடிப்பது தான் மழைக்கண்ணீரோ?

                                                -----

3.                                   மாறிய காலம்            16-07-1983

காலம் மாறிவிட்டது - ஆம்

பாருங்கள்

பலர்முன்னே வெட்கமின்றி தன்

மலைக்காதலனை தழுவி நிற்கின்றாள்

இந்த கார்மேகப்பெண்!

நாணத்தால் முகம் சிவக்கும் என்பார்கள் - ஆனால்

இவளுக்கு ஏன் முகம் கருக்கிறது?  ஆம்

காலம் மாறிவிட்டது!

                                             ----------

4.                              அதிருஷ்டசாலி              05-08-1983

அழகிய பெண்ணே !

காதலிக்கிறேன் என்றேன்!

அவளோ

அண்ணி அதிர்ஷ்டசாலி என்றாள்!

                                                   -------

5.                                                    கடன்           13-02-1984

பெண்ணே

உனக்கு கடன் வாங்கித்தான் பழக்கமா?

மானிடம் கண்ணைப்பெற்றாய் 

தேனைப்போல் குரலைபெற்றாய்

குயிலிடம் குரலைபெற்றாய்

மயிலிடம் சாயல் பெற்றாய்

இன்று

என் இதயத்தையும் கேட்கிறாயே !

உனக்கு கடன் வாங்கித்தான் பழக்கமா?

                                                    ------

6                                                  .வசந்த வாழ்வு   22-03-1984

ஆண்டவா

என் வாழ்வு முழுவதும் 

பூஞ்சோலையாக்க நான் வேண்டவில்லை

ஆனால்

ஒருசில வசந்தங்களையேனும் கொடு!

ஆனால்

வசந்ததிலேயே வாழ்வு முடியட்டும்!

                                                      -------                                   

7.    பெண்ணே

உன் கண்கள் என்ன 

நட்சத்திரங்களோ என

ஐயுற்றேன் 

பிறகு தான் தெளிந்தேன்

முழு நிலவுக்குள்

ஏது

நட்சத்திரமென்று?


பெண்ணே

எல்லோரும் உனைப்பார்த்து

கவிதை படைக்கின்றனரே

அவர்கள் கவிஞர்களா? 

இல்லை! இல்லை!

வெறும் காப்பி(copy ) அடிப்பவர்கள்!

ஏனென்றால்

நீயே ஒரு கவிதை தானே!

                                                             ---------

8                                       தனிமை              04-07-1984

தனிமையே !

உன் 

கொடுமை உனக்கெப்படி 

தெரியும்?

நீதான்

எப்போதும் என்னுடனே

இருக்கிறாயே!

                                      ----------

9.                                                     பசலை                 05-10-1985

சங்க கால நாயகிக்கு

கைவளை 

நழுவியது பசலை நோயால்!

ஆனால்

என்னவளுக்கோ நான் அருகிருக்கும்போதே!

காரணம் கேட்டால்,

கண் இமைக்கிறாளாம்!




 









 


 

No comments:

Post a Comment