Tuesday, December 28, 2021

       வாராமல் போனதென்ன?

(Dedicated to the daughter I never had)

பிஞ்சுக் கால்களால் என்
நெஞ்சை உதைத்திட்டு
கொஞ்சு மொழிபேசி மனம்
கொள்ளை கொள்ளாமல்
வஞ்சகியே நீயும்
வாராமல் போனதென்ன?

வண்ணப் பட்டாடையோடு
சின்ன கொலுசு நடை
சிங்கார புன்னகையால்
எண்ணம் கவர்ந்திடவே
என்னிடம் நீ வாராமல்
எங்கே தான் சென்றாயோ?

தாய்க்கு நல்ல மாமியாராய்
தந்தைக்குற்ற தோழியுமாய்
தம்பிகட்கு தாயுமாகி
தரணிக்கே ராணியென
வளர்த்திடவே நான் நினைத்தேன்
சீரும் சிறப்புடனே
பேரும் பெருமையுடன்
தேரேறி பவனி வர
வாராமல் போனதென்ன?

No comments:

Post a Comment