Thursday, December 30, 2021

                                                 மன்னவனும் எங்கேயடி       10-06-1983


பார்த்த கண் பார்த்திருக்க - பாவை

நானும் காத்திருக்க

சேர்ந்தவனை காணோமடி - தோழி

சென்றவிடம் அறியேனடி! 


மாலையிருள் மண்டிவிட - விண்

மீன்களவை  வந்துவிட 

சந்திரனைக் காணோமடி - தோழி

மன்னவனும் எங்கேயடி!


கைப்பிடித்து அன்புடனே - நாண்

கழுத்திலேற்றி மணந்தவென்னை

கண்கலங்க வைத்தானடி -  எங்கே 

மனம் மயங்கி நின்றானோடி?


காளையவன் சன்னதியில் - மனம்

களிப்பெய்தும் மங்கையென்னை 

காப்பாற்ற வருவானோடி - தோழி

கண்துடைக்க மாட்டானோடி !


துன்பம் மிகப்பெருக - உளம்

துடிதுடிக்க கலங்குமெந்தன் 

துயர் தீர்க்க வாரானோடி - தோழி

தூது சென்று பாராயோடி?

No comments:

Post a Comment