Tuesday, December 28, 2021

Written on the occassion of 90th birthday of Kandamangalam Shri Sadasiva Iyer.


கண்டமங்களத்திலுதித்த

 கவிப்பெருந்தகையே - உனை

கண்டதுமெனுள்ளத்தில் 

பொங்குதோரு கவியே!


உமை பாகன் பெயர் கொண்டி
வுலகினில் அவதரித்தாய்!
எமை காக்க எம்நடுவே 
உலவிடும் சிவனானாய்!

அலமேலு கரம்பிடித்து
ஆதவனுமானாய் நீ - உனை
அண்டியவர்க்கனுதினமும்
ஆலமரமானாய் நீ!   --  (கண்ட)
 
நாராயணன் நாமமுன்தன்
நாவினுக்கு அலங்காரம்- அதை
நாள்தோறும் நவின்றிட்டே
நாரதனை விஞ்சிடுவாய்!

திருமால் மருகனையும்
தினந்தோறும் மறவாமல்
திருப்புகழ் பாடிவந்த
நின்புகழ் ஒங்கட்டுமே! --- ( கண்ட)

ஏகாதசி நாளிலுந்தன்
பக்தியது பெரிதே - உந்தன்
ஏகாந்த மௌனத்தின்
ஏற்றமது அழகே!

சாகாவரம் பெற்றுனையே
சார்ந்திருக்கும் சந்ததியர்க்கு
மீகாமனைப்போலே -வழி
காட்டிடவே வேண்டுமய்யா!  -  (கண்ட)

தொண்ணூறை கடந்தும் பக்தி
தொண்டினையே ஆற்றுகின்றாய!-இன்னும்
பலநூறு காண்பதற்கு அந்த பரமனையே வேண்டிடுவோம்!


வாழ்த்திடவே வயதில்லை
வணங்கிடவே அனுமதிப்பாய்! -உன்
தாளினுக்கு நமஸ்காரம்
தயவுடனே ஏற்றிடுவாய்!

பிரியமுடன் பாரதத்தில் 
அமைதியுடன் வாழ்வதற்கே
ஆவமுத வெண்ணெயுண்ட
மாலிவனின் நமஸ்காரம்!

ஆவமுத வெண்ணெயுண்ட
மாலிவனின் நமஸ்காரம்
ஆசிகள் பலகோடி
தந்தருள வேண்டுமைய்யா!

No comments:

Post a Comment