Thursday, December 30, 2021

                                                 எதுவழகோ           20-10-1980


காலைக் கதிரவன் பொன்னொளியில்

களிப்பாய் மலரும் தாமரையோ !


காளை அவன் முகம் கண்டவுடன்

கனிந்து சிவந்த நின் முகமோ?


மாலைக் காற்றின் இதமுடனே

காலைத் தழுவிடும் வெள்ளலையோ !


சேலை துவள நடை பழகும்

சேயிழை உந்தன் நடையழகோ?


முள்ளின் துணையில் ரோஜாவோ!

முல்லை போன்ற நின் சிரிப்போ?


கங்கையினழகோ காவிரியழகோ

மங்கையுனது உடலழகோ?  


இருண்ட வானின் கார்முகிலோ

சுருண்ட குழலுடை பெண்மயிலோ!


மருண்ட விழியுடை மானினமோ!

செறிந்த பொருளுடை நின்விழியோ?


பற்றுக்கொம்பில் பூங்கொடியோ

கற்புக்கரசி தேவதையோ?


சந்தம் சிறந்த கவிதைகளோ

சாந்தம் தவழும் புவிமகளோ?


முத்தோ மணியோ மரகதமோ

அச்சோ ! அறியேன் எதுவழகோ?





 

 

No comments:

Post a Comment